சக நடிகைகளுக்காக வரிந்துக்கட்டிக்கொண்டு பேசிய ஸ்ருதிஹாசன்!

சக நடிகைகளுக்காக வரிந்துக்கட்டிக்கொண்டு பேசிய ஸ்ருதிஹாசன்!
  • PublishedMay 27, 2023

உலக நாயகனின் வாரிசாக இருந்த போதிலும் ஸ்ருதிஹாசனுக்கு இப்போது தமிழில் மார்க்கெட் குறைந்துவிட்டது என்பது தான் உண்மை.

நடிக்க வந்த புதிதில் கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்த இவர் இப்போது தெலுங்கு பக்கம் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில்,  கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டார். அப்போது ஹீரோயின்களுக்காக இவர் வரிந்து கட்டி பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது அஜித்,  விஜய் போன்ற ஹீரோக்களை விட எந்த விதத்திலும் ஹீரோயின்கள் குறைந்து போய்விடவில்லை.  எங்களுக்கும் அதிக சம்பளம் கொடுக்க வேண்டும்.

பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் சென்ற பிரியங்கா சோப்ரா அங்கு ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் வாங்குகிறார். அதை கேட்கும் போது பெருமையாக இருக்கிறது.

ஆனால் இங்கு நாயகிகளுக்கு இணையான சம்பளம் யாரும் கொடுப்பதும் கிடையாதுஇ அது குறித்து பேசுவதும் கிடையாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *