ஜித்தன் ரமேஷிடம் இருந்து கை நழுவிய வாய்ப்பு : பாலாவிற்காக காத்திருந்த பரிதாபம்!

ஜித்தன் ரமேஷிடம் இருந்து கை நழுவிய வாய்ப்பு : பாலாவிற்காக காத்திருந்த பரிதாபம்!
  • PublishedMay 12, 2023

இயக்குனர் பாலா ‘அவன் இவன்’ படத்தின் கதையை ஜித்தன் ரமேஷ் மற்றும் அவருடைய தம்பி ஜீவா இருவர்களையும்  வைத்துதான் எழுதினாராம்.

ஜித்தன் ரமேஷ் மற்றும் ஜீவா இருவரையும் நடிக்க வைக்க ஆசைப்பட்டு எழுதிய கதையில் சரி என்று இவர்கள் ஒத்துக் கொண்டனர். கொஞ்ச நாட்களில் படம் ஆரம்பிக்கப்படும் என நினைத்தார்கள். ஆனால் திடீரென இவர்களுக்கே தெரியாமல் அந்த படத்தில் விஷால்,  ஆர்யா நடிப்பதாக போஸ்டர் வந்தது.

அதை பார்த்து ஜித்தன் ரமேஷ் வருத்தப்பட்டுள்ளார். என்னவென்று விசாரித்து பார்த்ததில் அந்த படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் எங்களை நடிக்க வைத்தால் யார் பார்ப்பார்கள் என்று கதாநாயகர்களை மாற்றிவிட்டனர் என்று கேள்விப்பட்டேன்.

ஒரு தயாரிப்பாளர் மகனாக இருந்தாலும் நான் பெரிதும் பாதிக்கப்பட்டது பல தயாரிப்பாளர்களால் தான் என வருத்தப்பட்டு பேசி உள்ளார் ஜித்தன் ரமேஷ்.

ஏனென்றால் ஜித்தன் ரமேஷின் தந்தை தயாரிப்பாளராக பலரது கோபத்தை சம்பாதித்திருக்கிறார். அதையெல்லாம் மூத்த வாரிசான ஜித்தன் ரமேஷ்சை தான் பழி தீர்த்து இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *