ராஜமௌலி – மகேஷ் பாபு இணையும் படு பிரமாண்டமான படம்… நியூ அப்டேட்…

ராஜமௌலி – மகேஷ் பாபு இணையும்  படு பிரமாண்டமான படம்… நியூ அப்டேட்…
  • PublishedJanuary 17, 2024

ராஜமௌலியின் இயக்கத்தில் கடைசியாக ஆர்.ஆர்.ஆர் படம் வெளியானது. அதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்த சூழலில் அவர் அடுத்ததாக மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்கவிருக்கிறார். படத்தின் ஆரம்பகட்ட பணிகள் மும்முரமாக நடந்துவரும் சூழலில் தற்போது அந்தப் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

ராஜமௌலி அடுத்ததாக மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்குகிறார். இந்தப் படமும் அவரது ஸ்டைலில் படு பிரமாண்டமாக தயாராக இருக்கிறது.

அதற்கான ஆரம்பக்கட்ட பணிகளில் இப்போது ராஜமௌலி இருக்கிறார். இந்த படம் அட்வென்ச்சர் ஜானரில் உருவாகும் என்றும் அநேகமாக ராமாயணத்தை அடிப்படையாக வைத்து உருவாகலாம் என்றும் கூறப்படுகிறது.

அதேபோல் படத்தின் ஹீரோயினாக தீபிகா படுகோனேவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்ததாகவும் ஒரு தகவல் ஓடியது. இந்நிலையில் படத்தில் நடிக்கவிருக்கும் நடிகை குறித்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.

அதன்படி இந்தோனேசியாவை சேர்ந்த செல்ஸி இஸ்லான் நடிக்கவிருப்பதாகவும் அவரை வைத்து ராஜமௌலி ஃபோட்டோஷூட் நடத்தி முடித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயம் இதில் அவர் ஹீரோயினாக நடிக்கிறாரா இல்லை வேறு ஏதேனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா என்பது இனி வரும் நாட்களில் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *