“அவனை வாழ விடுங்க”செம்ம கடுப்பில் சாண்டியின் முன்னாள் மனைவி

“அவனை வாழ விடுங்க”செம்ம கடுப்பில் சாண்டியின் முன்னாள் மனைவி
  • PublishedDecember 30, 2023

தனது தனித்துவமான நடிப்பால் வெள்ளித்திரையில் புகழ்பெற்ற நடிகை தான் காஜல் பசுபதி, சில தினங்களுக்கு முன்பு தனக்கு இரண்டாவது திருமணம் நடந்து முடிந்துள்ளதாக கூறி பெரும் பரபரப்பை அவர் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

உலகநாயகன் கமல்ஹாசனின் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் திரைப்படத்தின் மூலம் கடந்த 2004 ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் அறிமுகமான நடிகை தான் காஜல் பசுபதி.

அதன் பிறகு கடந்த 2008 ஆம் ஆண்டு பிரபல நடன இயக்குனர் சாண்டி மாஸ்டரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இருப்பினும் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து கடந்த 2012 ஆம் ஆண்டு அவர்கள் இருவருக்கும் இடையே விவாகரத்து ஏற்பட்டது.

அதன் பிறகு சாண்டி மாஸ்டர் வேறொரு திருமணம் செய்துகொண்டாலும், காஜல் தனித்து தான் வாழ்ந்து வந்தார்.

இந்த சூழலில் சில தினங்களுக்கு முன்பு தான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக காஜல் பசுபதி தெரிவித்திருந்தார்.

அப்பொழுது பல செய்திகள், சாண்டி மாஸ்டரை காஜலுடன் இணைத்து செய்தி வெளியிட்ட நிலையில், இதை கண்டு மனம் வருந்தியுள்ளார் காஜல் பசுபதி.

தனக்கும் சாண்டி மாஸ்டருக்கு விவாகரத்து ஆகிவிட்டது, ஏன் அதன் பிறகும் அவருடைய புகைப்படங்களை இணைத்து என்னைப் பற்றிய செய்திகளை வெளியிடுகின்றீர்கள். அவனை வாழ விடுங்கள் என்று கூறி தனது இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றில் கொதிப்போடு பேசி உள்ளார் அவர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *