அமீர் – பாவனி ஜோடிக்கு டும்… டும்… டும்… இதோ இன்னொரு குட் நியூஸ்

அமீர் – பாவனி ஜோடிக்கு டும்… டும்… டும்… இதோ இன்னொரு குட் நியூஸ்
  • PublishedJanuary 23, 2024

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் காதலிக்கத் தொடங்கியவர்கள் தான் அமீர் – பாவனி ஜோடி. இவர்கள் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டனர்.

இதில் பாவனி ஆரம்பத்தில் இருந்தே கலந்துகொண்டார். ஆனால் அமீர் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்தார். வந்ததும் பாவனியிடம் சென்று தான் உங்களின் தீவிர ரசிகன் என அறிமுகமான அவர், நாளடைவில் அவர் மீது காதல் வயப்பட்டு, அந்நிகழ்ச்சியிலேயே புரபோஸும் செய்தார்.

ஆனால் பாவனி அவரின் காதலுக்கு ஓகே சொல்லாமல் இழுத்தடித்தார். இதற்கு காரணம் அவரின் முதல் திருமணம் தான்.

பாவனிக்கு ஏற்கனவே திருமணமாகி, அவரின் முதல் கணவர் தற்கொலை செய்துகொண்டார். அந்த துயர சம்பவத்தில் இருந்து தன்னால் மீள முடியாத காரணத்தால் அமீரின் காதலை ஏற்பதில் பாவனி தொடர்ந்து தயக்கம் காட்டி வந்தார். பின்னர் பிபி ஜோடி நிகழ்ச்சியிலும் இருவரும் ஜோடியாக கலந்துகொண்டனர்.

அப்போது தான் அமீரின் காதலை தான் ஏற்றுக்கொண்டதாக அறிவித்தார் பாவனி. அந்நிகழ்ச்சிக்கு பின்னர் இருவரும் லிவ்விங் டுகெதராக வாழ்ந்து வருகின்றனர். விரைவில் இந்த ஜோடிக்கு திருமணமும் ஆக உள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் பிரியங்கா தேஷ்பாண்டேவின் ஃபேன் மீட்டில் கலந்துகொண்ட அமீர், தானும் பாவனியும் காதலிக்க முக்கிய காரணமாக இருந்தது பிரியங்கா தான் என் கூறி தங்கள் திருமணம் குறித்த அப்டேட்டையும் கொடுத்துள்ளாராம்.

அதன்படி, பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் திருமண சுற்று நடந்தபோது, எனக்கும் பாவனிக்கும் ஒரு ரீல் கல்யாணம் நடந்தது. அதில் பிரியங்கா தான் தாலி எடுத்து கொடுக்க வேண்டும் என சொல்லியிருந்தேன். அந்த நிகழ்ச்சியில் மட்டுமல்ல நிஜத்திலும் எனக்கும் பாவனிக்கும் நடக்கும் திருமணத்திற்கு பிரியங்கா தான் தாலி எடுத்து கொடுத்து எங்கள் திருமணத்தை நடத்தி வைப்பார். நானும் பாவனியும் சேர்வதற்கு முக்கிய காரணமே பிரியங்கா தான். இந்த ஆண்டு கண்டிப்பாக எங்கள் திருமணம் நடைபெறும் என அமீர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *