கையில் பாட்டிலுடன் முதல் திருமண நாளை கொண்டாடிய ஹன்சிகா

கையில் பாட்டிலுடன் முதல் திருமண நாளை கொண்டாடிய ஹன்சிகா
  • PublishedDecember 4, 2023

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்த வெற்றிப் படங்களில் நடித்தவர் நடிகை ஹன்சிகா.

கடந்த ஆண்டில் சோஹைல் என்பவருடன் ஹன்சிகாவிற்கு பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. முன்னதாக பாரீசில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

தற்போது சில படங்களில் ஹன்சிகா கமிட்டாகி நடித்து வருகிறார்.

இதனிடையே தற்போது தன்னுடைய முதல் திருமண நாள் கொண்டாட்டத்தை தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார் ஹன்சிகா. திருமண நாளையொட்டி ஹன்சிகாவிற்கு சோஹைல் அடுத்தடுத்த சர்ப்பிரைஸ்களை கொடுத்துள்ளார்.

அவர் தனது கையால் எழுதிய 5 காதல் கடிதங்களை ஹன்சிகாவிற்கு பரிசளித்துள்ளார். மேலும் கேக் வெட்டியும் இவர்களது திருமண நாள் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டுள்ளது.

இதுமட்டுமில்லாமல் Champagne பாட்டிலுடன் தங்களது திருமண நாளை இந்த ஜோடி கொண்டாடியுள்ளது. இதுகுறித்த வீடியோவை தற்போது ஹன்சிகா சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதையொட்டி தனது திருமண வீடியோவையும் ஹன்சிகா பகிர்ந்துள்ளார். மேலும் தன்னுடைய திருமணம் போன்ற சிறந்த முடிவு எதுவும் இல்லை என்றும் லவ் யூ என்றும் சோஹைலுக்கு திருமண நாள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *