பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் கோபி : காரணம் இதுதானா?

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் கோபி : காரணம் இதுதானா?
  • PublishedMay 6, 2023

விஜய் டிவியல் தற்போது ஒளிபரப்பப்படுகிறது சீரியல்களில் பிரபலமானது பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியலின் டி.ஆர்.பி ரேட்டிங்கு காரணமே அதில் நடிக்கின்ற கோபி என்ற கதாபாத்திரம் தான். அந்த கதாபாத்திரத்தில், சதீஷ்தான்.

அவ்வளவு தத்ரூபமாக அவருடைய நடிப்பு அமைந்திருக்கும். இந்நிலையில், அந்த சீரியலில் இருந்து சதீஷ் விலகுவதாக அறிவித்திருந்தார்.

இதற்கு காரணமே, விஜய் டீவியில் நடந்த மோசமான ஒரு விடயம் தான். அதாவது,  சமீபத்தில் விஜய் டெலிவிஷன் அவார்டு கொடுக்கிற நிகழ்ச்சி நடந்தது.

இது பொதுவாகவே வருடத்திற்கு ஒரு முறை எல்லா தொலைக்காட்சிகளிலும் நடைபெறும். அதாவது அவர்கள் நடிப்பிற்கு அங்கீகரிக்கும் கொடுக்கும் விதமாக கௌரவ படுத்துவது தான் இந்த அவார்டு.

அப்படிப்பட்ட அவார்ட் கோபிக்கு கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக பாக்யா மற்றும் ராதிகா இவர்களுக்கெல்லாம் கிடைத்தது நமக்கு கிடைக்கவில்லையே என்று ஒரு ஆதங்கத்தில் தான் அவர் இந்த சீரியலில் இருந்து விலகலாம் என்று நினைத்திருக்கிறார்.

இதுவே இவருக்கு பெரிய அவமானத்தை கொடுத்திருக்கிறது. ஆனால் இவர் இல்லை என்றால் டிஆர்பி ரேட் குறைந்துவிடும் என்று விஜய் டிவி தந்திரமாக யோசித்து அவரை சமாதானப்படுத்தும் விதமாக அவரிடம் கெஞ்சி கூத்தாடி மறுபடியும் நடிக்க வர வைத்திருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *