நாட்டு நாட்டு பாடலுக்காக இந்தியாவின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருதை பெற்றார் கீரவாணி!

நாட்டு நாட்டு பாடலுக்காக இந்தியாவின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருதை பெற்றார் கீரவாணி!
  • PublishedApril 6, 2023

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம ஸ்ரீ விருது இசையமைப்பாளர் கீரவாணிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த  ஆண்டிற்கான பத்ம விருது குடியரசு தினத்தையொட்டி 106 பேருக்கு அறிவிக்கப்பட்டது. பத்ம விருது வென்றவர்களுக்கு விருது வழங்கும் விழா டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.

இதன்போது  மறைந்த பாடகி வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இதனை அவரது உறவினர் பெற்றுக் கொண்டார். மேலும் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணிக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

இன்போசிஸ் நாராயண மூர்த்தி மனைவி சுதா மூர்த்திக்கு சமூக பணிக்காக பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இந்த விருதுகளை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.

நாட்டு..நாட்டு.. பாடலுக்கு இசையமைத்த கீரவாணிக்கு பத்ம ஸ்ரீ விருது.. குடியரசு தலைவர் வழங்கினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *