லெஜெண்ட் சரவணனின் அடுத்த படத்தின் சூட்டிங் ரெடி… காஷ்மீர் போன காரணம் இதுதானா

லெஜெண்ட் சரவணனின் அடுத்த படத்தின் சூட்டிங் ரெடி… காஷ்மீர் போன காரணம் இதுதானா
  • PublishedMarch 3, 2024

பிரபல தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் சினிமாவில் ஹீரோவாக நடித்து தி லெஜெண்ட் என்ற படத்தை கடந்த 2022ம் ஆண்டில் வெளியிட்டிருந்தார். இந்த படம் பரவலாக நல்ல விமர்சனங்களை பெற்ற நிலையில் படம் வெற்றி படமாகவும் அமைந்தது.

இந்தப் படம் ஓடிடியிலும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜெண்ட் சரவணன் நடிக்கவுள்ள படத்தின் சூட்டிங் விரைவில் துவங்க உள்ளது.

முதல் படமான தி லெஜெண்ட் படத்தையே பான் இந்தியா படமாக வெளியிட்டு மாஸ் காட்டினார் லெஜெண்ட் சரவணன்.

இந்த படத்தின் ஷூட்டிங் வரும் ஏப்ரல் மாதத்தில் துவங்க உள்ளதாகவும் முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக சில மாதங்களுக்கு முன்பு காஷ்மீருக்கு லெஜெண்ட் சரவணன் சென்றிருந்தார்.

அங்கு அவர் பனிபடர்ந்த சூழலில் பல புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது உருவாகவுள்ள லெஜெண்ட் சரவணன் 2 படத்திற்கான லொகேஷனை தேர்வு செய்யவே அவர் முன்னதாக காஷ்மீர் சென்றாரா என்று ரசிகர்கள் தற்போது கேள்வி எழுப்பி வருகின்றனர்.

முதல் படத்தை வெற்றிப் படமாக மாற்றியிருந்த லெஜெண்ட் சரவணன் தற்போது இரண்டாவது படத்தையும் தானே தயாரித்து ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார். இந்த படமும் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கலாம்.

எதிர்நீச்சல், காக்கிச்சட்டை உள்ளிட்ட வெறறிப்படங்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்தவர் துரை செந்தில்குமார். அடுத்ததாக சூரியின் கருடன் படத்தை இயக்கியுள்ள துரை செந்தில்குமார் லாரன்ஸ் லீட் கேரக்டரில் நடிக்கும் அதிகாரம் மற்றும் நயன்தாராவின் நயன்தாரா81 படத்தையும் அடுத்தடுத்து இயக்கவுள்ளார். இதனிடையே லெஜெண்ட் சரவணனின் 2வது படத்தையும் அவர் இயக்கவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *