செய்தியாளர் சந்திப்பில் உளறிக்கொட்டிய மன்சூர் அலிகான்!

செய்தியாளர் சந்திப்பில் உளறிக்கொட்டிய மன்சூர் அலிகான்!
  • PublishedApril 14, 2023

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வருகிறது லியோ படம். திரிஷா,  அர்ஜுன்,  கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின்,  சஞ்சய் தத் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்து வருகிறார்கள்.

ஆரம்பத்திலேயே இந்த படத்தில் மன்சூர் அலிகான் நடிக்க உள்ள செய்தி அவ்வப்போது வெளியாகிக் கொண்டிருந்தது. ஆனால் லியோ படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்த போது அதில் மன்சூர் அலிகான் கலந்து கொள்ளவில்லை.

ஆகையால் லியோ படத்தில் மன்சூர் அலிகான் இருக்கிறாரா என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு பட பூஜையில் கலந்து கொண்ட மன்சூர் அலிகான் இடம் பத்திரிக்கையாளர்கள் லியோ படத்தை பற்றி கேள்வி எழுப்பினர்.

அதில் எப்போதும் போல தன் பாணியில் எல்லாவற்றையும் மனுஷன் உளறி கொட்டி விட்டார். அதாவது எவ்வளவு நாள் கால்ஷீட் கேட்டார் என்று ஒன்று விடாமல் அனைத்தையும் சொல்லிவிட்டாராம்.

மேலும் காஷ்மீரில் நடைபெற்ற படப்பிடிப்பில் லோகேஷ் தன்னை அழைக்கவில்லை என்று கூறியிருந்தார். சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற உள்ள லியோ படபிடிப்பில் தான் கலந்து கொள்வேன் என்று மன்சூர் அலிகான் கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *