பொன்னியின் செல்வனுக்கே டப் கொடுத்த புஷ்பா 2 : இசை உரிமம் மட்டும் இத்தனை கோடிக்கு வசூலாகியதா?

பொன்னியின் செல்வனுக்கே டப் கொடுத்த புஷ்பா 2  : இசை உரிமம் மட்டும் இத்தனை கோடிக்கு வசூலாகியதா?
  • PublishedMay 12, 2023

கடந்த 2021 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி இந்திய சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய கவனத்தை ஈர்த்த திரைப்படம் புஷ்பா. இந்திய சினிமாவில் பான் இந்தியா மூவி பிரபலமாகி கொண்டிருக்கும் நேரத்தில் ரிலீஸ்  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

செம்மர கடத்தலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு மட்டும் ஆடியது மிகப்பெரிய வைரலானதோடு  நல்ல வரவேற்பையும் பெற்றது.

இதனைத் தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது. இதனுடைய ட்ரெய்லர் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தற்போது இந்த படத்தின் வியாபாரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி படத்தின் இசை உரிமம் மட்டுமே 45 கோடிக்கு டி சீரிஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் ரிலீஸ் ஆகி கோடிகளை அள்ளிய பொன்னியின் செல்வன் ஆடியோ உரிமை விற்ற தொகையை விட இது அதிகம் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *