கதையே கேட்காமல் நடிக்க தயார் – பிரியா பவானி சங்கர்!

கதையே கேட்காமல் நடிக்க தயார் – பிரியா பவானி சங்கர்!
  • PublishedJune 19, 2023

தமிழ் திரை உலகின் பிஸியான நடிகைகளில் ஒருவர் பிரியா பவானி சங்கர். அவர் எஸ் ஜே சூர்யாவின் ‘பொம்மை’ திரைப்படம்  வெளியாகியுள்ளது.

இதனையடுத்து  ‘இந்தியன் 2’,  ‘டிமான்டி காலனி 2’,  ‘ஜீப்ரா’ ‘அரண்மனை 4’ , ஹரி-விஷால் இணையும் படம் உள்பட ஐந்து படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த பிரியா பவானி சங்கர் ‘மான்ஸ்டர்’ படத்தை இயற்றிய நெல்சன் வெங்கடேசன்,  ‘பொம்மை’ படத்தை இயக்கிய ராதா மோகன் ஆகியோர்களின் அடுத்த படங்களில் கதையே கேட்காமல் நடிக்க தயார் என்று கூறியுள்ளார்.

மேலும் தான் மிகவும் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் வெற்றிமாறன் ஒரு மிகச் சிறந்த இயக்குனர் என்றும் அவரது படத்திலும் கதை கேட்காமல் நடிக்க தயார் என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *