பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்காக த்ரிஷாவிற்கு வழங்கப்பட்ட சம்பளம்!

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்காக த்ரிஷாவிற்கு வழங்கப்பட்ட சம்பளம்!
  • PublishedApril 22, 2023

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்ப்பு இரண்டாம் பாகத்திற்கும் கிடைக்கும் என படக்குழுவினர் எதிர்பார்த்துள்ளனர்.

இதற்காக ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று ப்ரமோஷன் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அந்த படத்திற்காக த்ரிஷா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

குந்தவையாக நடித்த திரிஷா முதல் பாகத்திற்கு 2.5 கோடி சம்பளமாக பெற்றிருந்தார். முதல் பாகத்தில் திரிஷாவுக்கு பெரிய அளவில் காட்சிகள் எதுவும் இல்லை.

ஆனால் இரண்டாம் பாகத்தில் குந்தவை கதாபாத்திரம் அதிகமாக இருப்பதால் திரிஷாவுக்கு இரண்டாம் பாகத்திற்கு மட்டும் 3 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி பொன்னியின் செல்வன் முதல் மற்றும் இரண்டாம் பாகத்திற்கு மொத்தமாக 5.5 கோடி சம்பளமாக திரிஷா பெற்றுள்ளார். பீல்ட் அவுட் ஆனாலும் திரிஷாவுக்கு இவ்வளவு சம்பளமா என ரசிகர்கள் வாயை பிழைக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *