ராஜமௌலியிடம் கத்துகோங்க : பொன்னியின் செல்வனை கிழித்து தொங்கவிட்ட பிரபலம்!

ராஜமௌலியிடம் கத்துகோங்க : பொன்னியின் செல்வனை கிழித்து தொங்கவிட்ட பிரபலம்!
  • PublishedMay 3, 2023

பொன்னியின் செல்வன் பாகம் இரண்டு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இருந்தாலும் வசூல் இன்னும் ஏறுமுகத்தில் தான் இருக்கிறது. தற்போது வரை 200 கோடி ரூபாவை பெற்றுள்ளது.

கல்கியின் நாவலில் இருக்கும் முக்கிய அம்சங்களை அவர் தன்னுடைய இஷ்டத்திற்கு மாற்றி விட்டதாக பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் பத்திரிக்கையாளர் பாண்டியன் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

மணிரத்தினம்,  சுஹாசினி இருவரும் ராஜமௌலியிடம் ஆறு மாத காலம் உதவி இயக்குனராக பணியாற்ற வேண்டும் என்றும் ஆந்திராவில் அவரிடம் தங்கி படம் எடுப்பது எப்படி என கற்றுக் கொள்ளுங்கள் எனவும் மோசமாக விமர்சித்து இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் ஒரு நல்ல கதையை வீணடித்து வைத்திருக்கிறார்கள். பாகுபலி கதையே இல்லை என்றாலும் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

ஆனால் மணிரத்தினம் 500 கோடியை வேஸ்ட் செய்திருக்கிறார். இந்த பணத்தை கோடம்பாக்கத்தில் எனக்கு தெரிந்த உதவி இயக்குனர் ராஜா ஜெயம் என்பவரிடம் கொடுத்தால் அருமையாக படம் எடுத்துக் கொடுப்பார்.

அதுவும் 100 கோடியில் இதுபோன்ற நான்கு பிரம்மாண்ட படத்தை எடுத்துக் கொடுத்து விடுவார் என்றும் அவர் மணிரத்தினத்தை காட்டமாக விமர்சித்துள்ளார்.

அவருடைய இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *