விஜையை பின்பற்றும் சிம்பு : ஒருவேளை அவருக்கும் ஆசை வந்துவிட்டதோ?

விஜையை பின்பற்றும் சிம்பு : ஒருவேளை அவருக்கும் ஆசை வந்துவிட்டதோ?
  • PublishedApril 19, 2023

சிம்பு தற்போது சினிமாவில் தனது செகண்ட் இன்னிங்ஸை தொடங்கிய பட்டையை கிளப்பி வருகிறார். இவருடைய நடிப்பில் வெளியாகிய அடுத்தடுத்த படங்கள் வசூல் ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளன.

அந்தவகையில் சமீபத்தில் வெளியான பத்துதல திரைப்படமும் நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளது. இந்நிலையில், சிம்புவும், தற்போது விஜயினுடைய பாதையை பின்பற்றுவதாக சிலர் கூறி வருகின்றனர்.

அதாவது சிம்புவுக்கும் அரசியலில் ஈடுபாடு வந்துவிட்டதோ என்ற சந்தேகம் அவருடைய இரசிகர்களுக்கு எழுந்துள்ளது.  அதாவது கடந்த சில வருடங்களாகவே தளபதி விஜய்க்கு அரசியல் ஆசை வந்துள்ளது. இதனால் அடிக்கடி தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். மேலும் பிரியாணி விருந்து வைப்பதை விஜய் வாடிக்கையாகவே வைத்துள்ளார்.

அந்த வகையில் கடைசியாக பனையூரில் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்த போது பிரியாணி விருந்து வைத்திருந்தார். இப்போது சிம்புவும் தனது வீட்டில் ரசிகர்களை அழைத்து பிரியாணி விருந்து வைத்துள்ளார். அதுமட்டுமின்றி அவர் கைகளால் ரசிகர்களுக்கு பிரியாணியை பரிமாறி உள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *