விஜயுடன் கூட்டணி அமைக்க காத்திருக்கும் இரண்டு இயக்குனர்கள்!

விஜயுடன் கூட்டணி அமைக்க காத்திருக்கும் இரண்டு இயக்குனர்கள்!
  • PublishedApril 19, 2023

தளபதி விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். பக்கா ஆக்சன் கதையாக உருவாகிக் கொண்டிருக்கும் இந்த படம் முடிவடையும் நிலையில் இருக்கிறது.

இரண்டு கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு படக்குழு தற்போது சென்னையில் மீதி காட்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். படமும் அக்டோபரில் ரிலீஸ் ஆகப்போகிறது.

இதற்கிடையே விஜயினுடைய அடுத்த திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அவருக்கு இரண்டு இயக்குனர்கள் கதை கூறி இருப்பதாகவும், அதில் ஒருவரை அவர் தெரிவு செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

அதாவது, இயக்குனர் அட்லியுடன் விஜய் அடுத்த திரைப்படத்தில் இணைந்து பணியாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம்,  தெலுங்கில் கிராக் மற்றும் வீரசிம்மா ரெட்டி திரைப்படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மல்லி விஜய்க்கு கதை சொல்லி இருக்கிறார் எனவும் அவருக்கும் கதை பிடித்துப் போய்விட்டதாகவும் அடுத்து இவர்கள் இருவரும் தமிழ் மற்றும் தெலுங்கில் படம் பண்ண இருக்கிறார்கள் என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

ஏற்கனவே விஜயினுடைய வாரிசு திரைப்படம் தெலுங்கு இயகுனரான வம்சியுடன் இணைந்து செய்ததுதான். இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை கொடுக்கவில்லை. ஆகையால் விஜய் அடுத்ததாக அட்லியுடன் இணைய வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *