500 கோடியை வைத்து கணக்குப்போட்ட விக்ரம் : கோடி கோடியாக கொட்டும் தயாரிப்பாளர்!

500 கோடியை வைத்து கணக்குப்போட்ட விக்ரம் : கோடி கோடியாக கொட்டும் தயாரிப்பாளர்!
  • PublishedApril 19, 2023

சமீபகாலமாக விக்ரமின் படங்கள் சரியாக ஓடாத நிலையில், அவருக்கு கைக் கொடுத்த படம் என்றால் அது பொன்னியின் செல்வன்தான்.

அனைவரும் எதிர்பார்த்தபடியே மிகப் பிரமாண்டமாக அமைந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதற்கு முக்கிய காரணம் இயக்குனர் மணிரத்தினம் மற்றும் தயாரிப்பாளர் தான். மேலும் அதன் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமும் எடுத்து முடித்து விட்டார்கள்.

இந்த படமும் முதல் பாகத்தைப் போலவே வெற்றியடைய வேண்டும் என்பதற்காக அதிக அளவில் மெனக்கெடு செய்து பிரமோஷன் செய்து வருகிறார்கள். அதற்காக படக்குழுவில் உள்ள அனைவரும் சேர்ந்து இந்தியா முழுவதும் பிரமோஷன் செய்து சுற்றி வருகிறார்கள்.

ஆனால் இதற்காக விக்ரம் தயாரிப்பாளரிடம் எங்களுக்கு தனியாக விமானம் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அப்பொழுதுதான் சீக்கிரமாக வேலை முடிந்து திரும்பி வர முடியும் என்பதற்காக கேட்டதாக சொல்லப்படுகிறது.

இதனால் தயாரிப்பு நிறுவனமான லைக்கா என்ன செய்வது என்று தெரியாமல் விக்ரம் கேட்டதுக்கு மறுப்பும் தெரிவிக்க முடியாமல் சரி என்று அவர் கேட்டபடியே தனி விமானம் ஒன்றை அமைத்து அவர்களை அழைத்துச் சென்று வருகிறார்கள்.  ஆனால் அதன் பின் இதற்கு ஆகும் செலவுகளை நினைத்து கொஞ்சம் தவித்து வருகிறார்.

ஏனென்றால் இந்த செயலுக்காக ஒரு மாதத்திற்கு மட்டும் 1 கோடியை 80 லட்சம் ரூபாய் செலவு ஆகிறது. இந்த பிரமோஷன் முக்கியமானதாக இருந்தாலும் இந்த மாதிரி ஏற்பாட்டால் தயாரிப்பாளர் மிகவும் கலக்கத்தில் இருக்கிறாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *