கணவர் குறித்து முகம் சுளிக்கும் வகையில் பேசிய சுஹாசினி – திட்டி தீர்க்கும் ரசிகர்கள்!

கணவர் குறித்து முகம் சுளிக்கும் வகையில் பேசிய சுஹாசினி – திட்டி தீர்க்கும் ரசிகர்கள்!
  • PublishedApril 23, 2023

தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் மணிரத்தினம். இவருடைய இயக்கத்தில் தற்னபோது பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றியில் நடிகையும், மணிரத்தினத்தின் மனைவியுமான சுஹாசினி பேசிய விடயங்கள் முகம் சுளிக்கும் வகையில் அமைந்திருந்ததாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

அதாவது,  சமீபத்திய நேர்காணல் நிகழ்ச்சியில் இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் பேட்டி எடுத்தார். அப்போது சுஹாசினி தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றியும் பகிர்ந்திருந்தார்.

அதில் நானும்,  மணிரத்னமும் திருமணம் செய்து கொள்ளும்போது நான் ஒரு மிகப்பெரிய பிரபலமான நடிகை என்றும் அவர் அப்போதுதான் ஒன்றிரண்டு படங்களை இயக்கிய இயக்குனர் என்றும் சொல்லியிருந்தார்.

மேலும் அப்போது சுஹாசினி பொருளாதார ரீதியாக நன்றாக இருந்ததாகவும் ஆனால் அவருடைய கணவர் மணிரத்தினம் பேங்க் அக்கவுண்டில் வெறும் 15000 மட்டுமே இருந்தது என்றும் பேசி இருந்தார்.

சினிமா கலைஞர்கள் எல்லோருமே தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அவர்கள் பட்ட கஷ்டங்களை பற்றி பேசுவது என்பது சகஜமான ஒன்றுதான். ஆனால் சுஹாசினி பேசும் பொழுது முகம் சுளிக்கும் வகையில் அமைந்திருந்ததாக ரசிகர்கள் திட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *