ஆயிரம் கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ள சூர்யாவின் பிரமாண்ட படம்!

ஆயிரம் கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ள சூர்யாவின் பிரமாண்ட படம்!
  • PublishedJune 13, 2023

நடிகர் சூர்யா தற்போது கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே பல முன்னணி நடிகர்களும் சூர்யாவிற்கு வலைவீசி வருகிறார்கள்.  ஏற்கனவே சங்கர் இயக்கத்தில் மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவாகும் வேள்பாரி படத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டு வருகிறது.

ஆனால் இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் மற்றொரு இயக்குனர் ஒருவர் முந்திக்கொண்டு சூர்யாவை வளைத்து பிடித்து இருக்கிறாராம்.

அந்த வகையில்  ராகேஷ் ஓம் பிரகாஷ் மேரா,  சூர்யாவை வைத்து பிரம்மாண்டமான படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளாராம்.

இது குறித்த பேச்சு வார்த்தைகள் அனைத்தும் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இப்படம் வரலாற்று படமாக உருவாக இருக்கிறது என்ற தகவலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த சரித்திர படத்தில் சூர்யா கர்ணன் கேரக்டரில் நடிக்க இருக்கிறாராம். இரண்டு பாகங்களாக வெளிவர திட்டமிடப்பட்டிருக்கும் இப்படத்திற்காக ஆயிரம் கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இதை வைத்து பார்க்கும் பொழுது ராஜமௌலிக்கே டப் கொடுக்கும்  வகையில் இப்படம் உருவாகும் என்று தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *