சிம்புவால் இருந்து இடம் தெரியாமல் போன இயக்குனர்!

சிம்புவால் இருந்து இடம் தெரியாமல் போன இயக்குனர்!
  • PublishedMay 1, 2023

சிம்புவிற்கு சினிமாவில் சறுக்கல் ஏற்பட்ட போது அவரை உச்சத்திற்கு கொண்டு சென்ற திரைப்படம் தான், மன்மதன். இந்த படத்தை முருகன் இயக்கியிருந்தார்.

முருகன் அஜித்தின் நீ வருவாயா படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்துள்ளார். இப்போதைய அஜித்திடம் மன்மதன் படத்தின் கதையை கூறி இருக்கிறார்.

ஆனால் அப்போது அஜித் வேறு படங்களில் பிசியாக இருந்ததால் பிறகு நாம் படம் பண்ணலாம் என்று கூறிவிட்டாராம். எனவே சிம்புவிடம் முருகன் இந்த கதையை கூறியிருக்கிறார். இந்த கதை சிம்புவிற்கு பிடித்து போகவே அந்த படத்தை எடுத்துள்ளனர்.

ஆனால் படம் எடுப்பதற்கு முன்பதாக சிம்புவின் குடும்பத்தினர், இயக்குனருக்கு ஒரு கண்டிஷன் போட்டார்களாம். அதாவது, இந்த படத்தின் கதை, திரைக்கதை, இயக்கம் எல்லாம் சிம்புவின் பெயரில் வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்களாம்.

அப்போது படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இயக்குனரும் சம்மதித்திருக்கிறார். ஆனால் படம் வெளியாகி ஹிட் அடித்த பிறகு, இயக்குனருக்கு எந்தவொரு அங்கீகாரமும் இல்லாமல் போனதுடன், சிம்புவிற்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்க வழியமைத்தது.

இதனால் இயக்குனர் சிம்பு குடும்பத்தின் மீது வழக்கும் தொடர் இருந்தார். இப்போது என்ன ஆனார் என்பது கூட தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *