சர்ச்சையை ஏற்படுத்தியது விஜய்யின் அறிக்கை… ஸ்பெஷல் க்ளாஸ் எடுத்த பிரபலம்

சர்ச்சையை ஏற்படுத்தியது விஜய்யின் அறிக்கை… ஸ்பெஷல் க்ளாஸ் எடுத்த பிரபலம்
  • PublishedFebruary 5, 2024

கோலிவுட் மாஸ் ஹீரோ விஜய் விரைவில் அரசியலிலும் அறிமுகமாகவுள்ளார். சினிமாவை போல அரசியலிலும் விஜய் சாதிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்நிலையில் விஜய்க்கு பிரபலங்கள் தவிர்த்து பொதுமக்கள், மாணவர்கள், ரசிகர்கள் என பல தரப்பில் இருந்தும் விஜய்க்கு கணிசமான ஆதரவு கிடைத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக அனைவருக்கும் நன்றி தெரிவித்து மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார் விஜய்.

அதில், “தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு நான் முன்னெடுத்துள்ள அரசியல் பயணத்திற்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்த பெருமதிப்புக்குரிய பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அன்புக்குரிய திரைத்துறை நண்பர்கள், பாசத்துக்குரிய தமிழக தாய்மார்கள், சகோதர, சகோதரிகள், ஊக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள், “என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்” அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் பணிவான வணக்கங்கள்” என குறிப்பிட்டிருந்தார்.

விஜய்யின் இந்த நன்றி அறிக்கை பலரது கவனத்தை ஈர்த்தது. முக்கியமாக நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் என குறிப்பிட்டிருந்ததும் விவாதத்துக்கு உரியதாக மாறியது.

இந்நிலையில் விஜய்யின் அறிக்கை குறித்து வலைப்பேச்சு பிஸ்மி விமர்சனம் செய்துள்ளார். அதில், “தம்பி விஜய் கவனத்திற்கு, அறிக்கை அல்லது கடிதம் அனுப்பும் போது அதில் தேதியை குறிப்பிடணும்” என ட்வீட் செய்துள்ளார்.

அதாவது விஜய் தனது அறிக்கையில் தேதியே குறிப்பிடவில்லை. இதனை சுட்டிக் காட்டும் விதமாக விஜய்க்கு ஸ்பெஷல் க்ளாஸ் எடுத்துள்ளார் வலைப்பேச்சு பிஸ்மி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *