தெலுங்கில் தனது அடுத்த படத்திற்கு அடிபோட்ட வெங்கட் பிரபு!

தெலுங்கில் தனது அடுத்த படத்திற்கு அடிபோட்ட வெங்கட் பிரபு!
  • PublishedMay 10, 2023

தமிழ் சினிமாவில் வெங்கட் பிரபு சென்னை 28 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பொதுவாக இவர் இயக்கும் படங்கள் காமெடி கலந்த ஒரு என்டர்டைன்மென்ட் படங்களாக இருக்கும்.

இந்நிலையில், அவர் முதல் முறையாக தெலுங்கிலும் கால் பதித்து இருக்கிறார். அதாவது   நாக சைதன்யாவை வைத்து கஸ்டடி படத்தை எடுத்திருக்கிறார்.

இப்ப படம் வருகிற மே 12ஆம் தேதி வெளிவர இருக்கிறது. அதற்காக இப்பட பிரமோஷனில் வெங்கட் பிரபு பேசியுள்ளார். அதில் இப்பொழுது எனக்கு தெலுங்கு தெரியாது என்பதால் ஆங்கிலத்தில் பேசுகிறேன்.

அடுத்து இப்படத்தை மறுபடியும் நாக சைதன்யாவை வைத்து பார்ட் 2 வை எடுப்பேன். அப்பொழுது நான் பேசும்போது தெலுங்கில் பேசுகிறேன் என்று கூறியிருக்கிறார்.

ஏற்கனவே இவருடைய மாநாடு படத்தை பார்த்த பிறகு தமிழில் சிவகார்த்திகேயன் மற்றும் சிம்பு போன்ற முக்கிய கதாநாயகர்கள் கால்ஷீட் வெங்கட் பிரபுவுக்கு கொடுத்திருக்கிறார்கள்.

இப்படி இருக்கையில் தெலுங்கு பக்கம் சென்று மீண்டும் அங்கேயே படத்தை எடுப்பேன் என்று இவர் பேசியது தமிழ் ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை கொடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *