விஜய் இப்படிதான் : சித்தார்த் கூரிய விஷயத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!

விஜய் இப்படிதான் : சித்தார்த் கூரிய விஷயத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
  • PublishedJune 10, 2023

விஜய் எத்தனையோ படங்களில் ஜாலியாக நடித்திருந்தாலும் அவருடைய உண்மையான குணம் அமைதியாக இருப்பதுதான்.  இப்படித்தான் இவரைப் பற்றி பல நட்சத்திரங்களும் கூறி இருக்கிறார்கள்.

ஆனால் தற்போது முதல்முறையாக இவரைப் பற்றி நடிகர் சித்தார்த் கூரிய கருத்து எல்லோரையும்  ஆச்சரியப்பட வைக்கிறது. அதாவது நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே விஜய்யை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரது பாடல்களை பாடாமல் கேட்காமல் இருக்க மாட்டேன்.

அப்படி இருக்கும் பொழுது தற்செயலாக நான் அவரை ஒரு ஹோட்டலில் சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. அப்பொழுது நாங்கள் இருவரும் ஒன்றாக சாப்பிடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

அதிலிருந்தே நாங்கள் ரொம்ப நெருக்கமாக பழகிவிட்டோம். அந்த நேரத்தில் நாங்கள் அடிக்கடி பேசிக் கொள்வது என்னுடைய படங்களை பற்றி தான்.

அப்படித்தான் என்னுடைய தெலுங்கு படமான பொம்மரில்லு படத்தில் நான் டான்ஸ் ஆடிய மூவ்மெண்டை எப்படி ஆடினாய் என்று கேட்பார். ஏனென்றால் அது அவருக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது.

அதற்கு நான் அவரிடம் உங்களைப் பற்றி விஷயங்களை சொல்லுங்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் முதலில் நான் தான் உன்னிடம் கேட்டேன் அதற்கு பதில் சொல் அப்புறம் என்னிடம் கேள்வி கேளு என்று நக்கலாக பேசுவார்.

பிறகு நான் அவரை விஜய் என்று தான் கூப்பிடுவேன். அதற்கு அங்கு இருப்பவர்கள் அப்படி கூப்பிடக் கூடாது மரியாதையுடன் பேசுங்கள் என்று சொல்வார்கள். ஆனால் விஜய் அப்படிப்பட்ட ஆள் எல்லாம் கிடையாது. அவர் மிகவும் நார்மலான க்யூட்டான ஒரு நடிகர். அத்துடன் செம ஜாலி டைப் எனக் கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *