தீவிரமாக அரசியலில் இறங்க நேரம் பார்க்கும் விஜய் : ஸ்ரோங்காக போடப்பட்ட அத்திவாரம்!

தீவிரமாக  அரசியலில் இறங்க நேரம் பார்க்கும் விஜய் : ஸ்ரோங்காக போடப்பட்ட அத்திவாரம்!
  • PublishedMay 11, 2023

நடிகர் விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைத்துள்ளதால் இந்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இது ஒரு புறம் இருக்க விஜய் தற்போது அரசியலில் களம் இறங்குவதற்கு சரியான நேரம் பார்த்து வருவதாக தகவல் கசிந்துள்ளது. இதற்கான சில நடவடிக்கைகளை இப்போதே ஆரம்பித்துள்ளார்.

அதாவது,  பள்ளி பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண்களை பெற்ற மாணவ,  மாணவியருக்கு விஜய் தன் சார்பாக சிறப்பு பரிசுகளை வழங்க இருக்கிறாராம்.

அதற்கான அனைத்து வேலைகளையும் தற்போது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் முழு மதிப்பெண்கள் பெற்று வரலாற்று சாதனை படைத்த மாணவி நந்தினியை அந்த மாவட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர்.

அதைத்தொடர்ந்து மாவட்டம் வாரியாக முதல் மூன்று மதிப்பெண்களை எடுத்த மாணவ மாணவிகளின் பட்டியலை சேகரிக்குமாறு புஸ்ஸி ஆனந்த் கூறியிருக்கிறாராம்.

அதன்படி இந்த மாத இறுதிக்குள் முழு பட்டியலையும் தயாரித்து விட மக்கள் இயக்க நிர்வாகிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும் இந்த பரிசு வழங்கும் நிகழ்ச்சி சென்னை அல்லது திருச்சியில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *