திட்டம் போட்டு காய் நகர்த்தும் விஜய் : இதனால் தான் வெங்கட்பிரபுவை செலக்ட் செய்தாரா?

திட்டம் போட்டு காய் நகர்த்தும் விஜய் : இதனால் தான் வெங்கட்பிரபுவை செலக்ட் செய்தாரா?
  • PublishedMay 20, 2023

தளபதி விஜய் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் லியோ திரைப்படம் ஒரு அக்டோபர் மாதம் 19ஆம் திகதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இதற்கிடையில் சில தினங்களுக்கு முன் அவருடைய 68 ஆவது படத்தின் அறிவிப்புகள் வெளியாகி விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.

தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்கி,  அனிருத் இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் வெங்கட் பிரபுவின் சமீபத்திய படங்கள் தோல்வியை சந்தித்துள்ள நிலையில், தளபதி விஜய் தற்போது வேண்டுமென்றே ரிஸ்க் எடுப்பதாக நெட்டிஷன்கள் விமர்சித்து வருகின்றனர்.

இவையொருப்புறம் இருக்க தளபதி விஜய்  68 ஆவது படத்தின் மூலம் மிக நேர்த்தியாக காய் நகர்த்தி இருக்கிறார். இந்த படத்திற்கு 200 கோடி சம்பளமாக வாங்க இருக்கிறார்.

மேலும் படத்தை 40 நாட்களுக்குள் முடித்து விட வேண்டும் என்று வெங்கட் பிரபுவிடம் நிபந்தனை போட்டு இருக்கிறார். படம் எப்படி இருந்தாலும் தயாரிப்பாளர் போட்ட பணத்தை எடுத்து விடுவார் என்பது எல்லாருக்கும் தெரிந்து ஒன்றுதான்.

நடிகர் விஜய் 40 நாளில் 200 கோடியையும் அசால்டாக சம்பாதித்து விடுவார். விஜய் அடுத்தடுத்து அரசியல் நகர்வுகளை நகர்த்த இருக்கிறார். அதற்கான திட்டமிடலுக்குத்தான் இந்த 200 கோடி.

தளபதி விஜய் தன்னுடைய கட்சி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையின் ஈடுபட்டு வருகிறார். எப்படியும் பாராளுமன்றத் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *