நடுரோட்டில் மீனா செய்த காரியம் : பல வருடங்கள் கடந்து மனம் திறந்த ராஜ்கிரண்!

நடுரோட்டில் மீனா செய்த காரியம் : பல வருடங்கள் கடந்து மனம் திறந்த ராஜ்கிரண்!
  • PublishedJune 19, 2023

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய மீனா தற்போது 40 வருடங்களை கடந்து நீடித்து நிலைத்து நிற்கிறார்.

இவர் நடிப்பில்,  1991ல் கஸ்தூரிராஜா இயக்கத்தில் ராஜ்கிரண் தயாரிப்பில் உருவான படம் தான் என் ராசாவின் மனசிலே. இந்த படத்தின் படப்பிடிப்பின்போது நடைபெற்ற சில சுவாரஸ்யமான சம்பவங்களை ராஜ்சிரண்  பகிர்ந்துக்கொண்டார்.

அந்த விடயங்கள் தற்போது சோசியல் மீடியாவை ஆக்கிரமித்துள்ளன. அதாவது,  இப்படத்தில் நடிக்கும் பொழுது மீனாவிற்கு 15 வயதுதான் இருக்கும்.

இருப்பினும் இவர் பெரிய கதாபாத்திரத்தை ஏற்று தத்ரூபமாக நடித்திருப்பார். மேலும் இப்படத்தின் பாடல் காட்சி படப்பிடிக்கும் பொழுது  மீனா ஆடை மாற்ற வேண்டியதாக இருந்தது.

அப்பொழுது அங்கு கேரவன் இல்லாததால் தன்னால் படப்பிடிப்பு தாமதமாக கூடாது என்பதற்காக மீனா வந்த காரை ரோட்டோரமாக நிறுத்திவிட்டு கார் மறைவில் ஆடையை மாற்றினார் என ராஜ்கிரண் தெரிவித்தார்.

இத்தகைய சம்பவம் இவர் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது. மேலும் இப்படம் இவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்று பேர் சொல்லும் படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *