15 வயதில் மகள்… 2வது மனைவியாகும் வரலட்சுமி சரத்குமார்.. யார் இந்த நிகோலய் சச்தேவ்?

15 வயதில் மகள்… 2வது மனைவியாகும் வரலட்சுமி சரத்குமார்.. யார் இந்த நிகோலய் சச்தேவ்?
  • PublishedMarch 5, 2024

தமிழ் தெலுங்கில் முன்னணி வில்லி நடிகையாக வலம் வரும் வரலட்சுமி சரத்குமாருக்கு அண்மையில் மும்பையில் மிகவும் எளிமையாக நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

இவர்களின் நிச்சயதார்த்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் யார் இந்த நிகோலய் சச்தேவ் என ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

நடிகை வரலட்சுமிக்கும் மும்பை தொழிலதிபரான நிகோலய் சச்தேவுக்கும் மும்பையில் பெற்றோர் முன்னிலையில் நடந்த இந்த நிச்சயதார்த்தத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் மோதிரம் மாற்றிகொண்டனர். திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரலட்சுமி திருமணம் செய்து கொள்ளும் நிகோலய் சச்தேவ் “கேலரி 7” என்கிற பெயரில் பெரிய ஆர்ட் கேலரி ஒன்றை வைத்து இருக்கிறார். அவருடைய அப்பா அருண் சச்தேவ் அம்மா சந்திரா சச்தேவ் இருவரும் சேர்ந்து 1970ம் ஆண்டு ஆர்ட் கேலரியை தொடங்கினார்கள். அவர்களுக்கு பிறகு நிகோலய் சச்தேவ் இந்த ஆர்ட் கேலரியை கவனித்து வருகிறார்.

நிகோலய் சச்தேவ்க்கு 2009ம் ஆண்டே கவிதா என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிகளுக்கு பிறந்தவர் தான் காசா சச்தேவ், 15 வயதாகும் இவர் விளையாட்டு வீராங்கனையாக இருக்கிறார்.

நிகோலய் சச்தேவ் 41வயதாகும் நிலையில், 38 வயதாகும் வரலட்சுமி அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் 14 வருட காதல் என்று சோஷியல் மீடியாவில் செய்திகள் வெளியாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *