திருமணத்திற்கு முன்பே அதை செஞ்சி முடிச்சிட்டார்… வருங்கால கணவர் பற்றி மனம் திறந்த வரலட்சுமி

திருமணத்திற்கு முன்பே அதை செஞ்சி முடிச்சிட்டார்… வருங்கால கணவர் பற்றி மனம் திறந்த வரலட்சுமி
  • PublishedMay 1, 2024

நடிகை வரலட்சுமி சரத்குமார், தன்னுடைய காதல் கணவர் குறித்தும்… திருமணத்துக்கு முன்பே சொந்த வீடு ஒன்றை மும்பையில் வாங்கி உள்ளது குறித்தும் பல சுவாரஸ்ய தகவல்களை அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

தற்போது தன்னுடைய உடல் எடையை மளமளவென குறைத்து… ஸ்லிம் ஃபிட் நாயகியாக மாறியுள்ள வரலட்சுமி, திருமணத்திற்கு தயாராகி வருகிறார்.

சமீபத்தில் இவரின் திருமண நிச்சயதார்த்தம் மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்து முடிந்தது.

இவர் விரைவில் தன்னுடைய காதலர் நிக்கோலாய் சச் தேவ் என்பவரை திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

தன்னுடைய காதலர் பற்றி அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில், யாருக்கும் தெரியாத பல தகவல்களை கூறியுள்ளார் வரலட்சுமி.

அதாவது தான் திருமணம் செய்து கொள்ள உள்ள நிகோலாயை… கடந்த 14 வருடங்களாகவே தனக்கு தெரியும் என்றும், அவ்வப்போது மெசேஜ் மூலம் பேசி கொள்வோமே தவிர, சந்தித்து கொள்ள மாட்டோம்.

பின்னர் தன்னுடைய அப்பா அனுமதியை பெற்று தான் நிக்கோலாய் நார்வே நாட்டில் வைத்து தனக்கு புரபோஸ் செய்த்தாகவும் தெரிவித்துள்ளார். இதன் பின்னரே தங்களின் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் திருமணத்திற்கு முன்பே வரலட்சுமியின் வருங்கால கணவர் இருவரின் பெயரிலும் மும்பையில் வீடு ஒன்றை வாங்கியுள்ளார். அண்மையில் இதுகுறித்த, வீடியோ ஒன்றையும் வரலட்சுமி சரத்குமார் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *